விரைவில் வருகிறது எலெக்ட்ரிக் ஆட்டோ..! பெட்ரோல், டீசல் ஆட்டோக்களுக்கு தடை...!

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு அதிகரிக்க அரசு முயற்சித்து வரும் நிலையில் ஆந்திராவில் எலெக்ட்ரிக் ஆட்டோக்களை கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது. மேலும் எலெக்ட்ரிக் ஆட்டோக்களை பதிவு செய்வத

By Balasubramanian

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு அதிகரிக்க அரசு முயற்சித்து வரும் நிலையில் ஆந்திராவில் எலெக்ட்ரிக் ஆட்டோக்களை கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது. மேலும் எலெக்ட்ரிக் ஆட்டோக்களை பதிவு செய்வதிலும் பல்வேறு சலுகைகளை அரசு வழங்கியுள்ளது. பெட்ரோல், டீசல் ஆட்டோக்களை பதிவு செய்ய தற்காலிக தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

விரைவில் வருகிறது எலெக்ட்ரிக் ஆட்டோ..! பெட்ரோல், டீசல் ஆட்டோக்களுக்கு தடை...!

இந்தியாவில் காற்று மாசுபடுவதற்கு ஒரு முக்கியமான காரணியாக வாகனங்களில் இருந்து வெளியாகும் மாசுவும் இருக்கிறது. இதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.

விரைவில் வருகிறது எலெக்ட்ரிக் ஆட்டோ..! பெட்ரோல், டீசல் ஆட்டோக்களுக்கு தடை...!

குறைந்த வகை மாசுவை கட்டும் வெளியிடும் வாகனங்களை தயாரிக்க அரசு பாரத் என்ற குழுமத்தை ஏற்படுத்தி அதன் மூலம் வாகன உற்பத்தியாளர்களின் வாகனங்களில் இருந்து வெளியாகும் மாசு அரசு நிர்ணயித்த அளவுகளில் இருக்கிறதா என்பதை கண்காணித்து வருகிறது.

விரைவில் வருகிறது எலெக்ட்ரிக் ஆட்டோ..! பெட்ரோல், டீசல் ஆட்டோக்களுக்கு தடை...!

அவ்வப்போது அரசு நிர்ணயித்த மாசு கட்டுப்பாட்டிற்கு விதிமுறைகளை கடுமையாக்கி கொண்டே வருகிறது அந்த வகையில் வரும் 2019ம் ஆண்டு மார்ச் மாத்திற்கு பின்பு தயாரிக்கப்படும் வாகனங்கள் அரசு நிர்ணயித்துள்ளது பிஎஸ் 6 என்ற விதிமுறையின் கீழ் தான் தயாரிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளது.

விரைவில் வருகிறது எலெக்ட்ரிக் ஆட்டோ..! பெட்ரோல், டீசல் ஆட்டோக்களுக்கு தடை...!

இந்நிலையில் மாசுவை கட்டுப்படுத்த அரசு எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்கு விக்க துவங்கியுள்ளது. இந்த ரக வாகனத்தால் ஏற்படும் மாசு அளவு மிக மிக குறைவாக உள்ளது. இதனால் இந்த ரக வாகனங்களுக்கு அரசு மானியமும் வழங்கி வருகிறது.

விரைவில் வருகிறது எலெக்ட்ரிக் ஆட்டோ..! பெட்ரோல், டீசல் ஆட்டோக்களுக்கு தடை...!

இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் எலெக்ட்ரிக் ஆட்டோக்களை களம் இறக்க அரசு நடவிடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் ஆட்டோக்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக சமீபகாலமாக தயாரிக்கப்படும் டீசல் ரக ஆட்டோக்கள் அதிக அளவிலான மாசுவை ஏற்படுத்தியுள்ளது.

விரைவில் வருகிறது எலெக்ட்ரிக் ஆட்டோ..! பெட்ரோல், டீசல் ஆட்டோக்களுக்கு தடை...!

இதை கருத்தில் கொண்டு ஆந்திராவில் எலெக்ட்ரிக் ஆட்டோக்களை அதிகரிக்க வைக்க ஆந்திராவில் உள்ள குண்ட்டூர் மாவட்ட நிர்வாம் முடிவு செய்தது. அதன் படி மாவட்ட கலெக்ட்ர் கோனா சசிதர் மற்றம் ஜிஎம்சி கமிஷனர் ஸ்ரீகேஷ் ஆகியோர் பாரத் ஆட்டோமொபைல் நிறுவனத்திற்கு நேரடியாக சென்று எலெகட்ரிக் ஆட்டோக்கள் குறித்து கேட்டறிந்தனர்.

விரைவில் வருகிறது எலெக்ட்ரிக் ஆட்டோ..! பெட்ரோல், டீசல் ஆட்டோக்களுக்கு தடை...!

அதன் பின் அவர்கள் எலெக்ட்ரிக் ஆட்டோக்களை ஓட்டி பார்த்தனர். அவர்கள் அந்த ஆட்டோக்களில் திருப்தி ஏற்பட்டதை தொடர்ந்து அந்த மாவட்டத்தில் எலெகட்ரிக் ஆட்டோக்களை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியை மேற்கொள்வதாக உறுதியளித்தனர்.

விரைவில் வருகிறது எலெக்ட்ரிக் ஆட்டோ..! பெட்ரோல், டீசல் ஆட்டோக்களுக்கு தடை...!

அதன்படி தற்போது எலெக்ட்ரிக் ஆட்டோக்களுக்கான பதிவு செய்யும் விதிமுறைகளில் சற்று தளர்வுகளை ஏற்படுத்தி எளிதாக பதிவு செய்யும் வகையில் முறைப்படுத்தப்பட்டுள்ளது.

விரைவில் வருகிறது எலெக்ட்ரிக் ஆட்டோ..! பெட்ரோல், டீசல் ஆட்டோக்களுக்கு தடை...!

இது குறித்து அம்மாவட்ட கலெக்டர் கூறகையில் : " சிட்டிக்குள்சுமார் 30 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகிறது. இங்கு ஏற்படும் காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணமாக இந்த ஆட்டோக்கள் தான் இருக்கிறது. அதனால் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் ஆட்டோக்களை இங்கு பதிவு செய்ய தற்காலிகமாக தடை விதித்துள்ளோம். ஆனால் அதற்கு மாற்றாக எலெக்ட்ரானிக் ஆட்டோக்களை வாங்க அறிவுறுத்தி வருகிறோம்.

விரைவில் வருகிறது எலெக்ட்ரிக் ஆட்டோ..! பெட்ரோல், டீசல் ஆட்டோக்களுக்கு தடை...!

தற்போது பாரத் ஆட்டோ மொபைல் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து வருகிறது. புதிதாக எந்த நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க முன் வந்தாலும் அவர்களை வரவேற்ப்போம். இந்த நடவடிக்கையால் மெதுவாக சிட்டிக்குள் இருந்து பெட்ரோல், டீசல் ஆட்டோக்கள் வெளியேறி முழுமையாக எலெக்ட்ரிக் ஆட்டோக்களாக மாறும்.

விரைவில் வருகிறது எலெக்ட்ரிக் ஆட்டோ..! பெட்ரோல், டீசல் ஆட்டோக்களுக்கு தடை...!

தற்போது புதிய பெட்ரோல், டீசல் ஆட்டோக்கள் மார்கெட்டில் சுமார் ரூ 3.5 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் எலெக்ட்ரிக் ஆட்டோக்கள் ரூ 1.5 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

விரைவில் வருகிறது எலெக்ட்ரிக் ஆட்டோ..! பெட்ரோல், டீசல் ஆட்டோக்களுக்கு தடை...!

பெட்ரோல்/டீசல் ஆட்டோக்களைவிட எலெக்ட்ரிக் ஆட்டோக்களுக்கு பராமரிப்பு செலவும், பயண செலவும் குறைவு தான் எல்லா வகையிலும் எலெக்ட்ரிக் ஆட்டோக்கள் சிறப்பானதாகவே இருக்கிறது. " இவ்வாறு கூறினார்.

விரைவில் வருகிறது எலெக்ட்ரிக் ஆட்டோ..! பெட்ரோல், டீசல் ஆட்டோக்களுக்கு தடை...!

தற்போது ஆந்திராவில் குண்டூர் என்ற ஒரு மாவட்டத்தில் மட்டும் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை தொடர்ந்து இந்தியா முழுவதும் எடுத்தால் சிறப்பாக இருக்கும். மேலும் எலெகட்ரிக் ஆட்டோக்களில் வேகத்தை கட்டுப்படுத்த இயலும். இதனால் ஆட்டேக்களின் வேக கட்டுப்பாடு இல்லாமல் விதிமீறுவதை தடுக்க முடியும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

  1. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிக்கு இந்தியாவில் ரீகால் அறிவிப்பு!
  2. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிக்கு இந்தியாவில் ரீகால் அறிவிப்பு!
  3. இந்திய சாலைகளில் விரைவில் ஓடப்போகும் அதிநவீன ஹைட்ரஜன் பஸ்களின் மிரட்டலான சிறப்பம்சங்கள்
  4. விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் புதிய பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் பைக்கில் புதிய வண்ணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
  5. உலகின் உயரமான இடத்திற்கு சவால்கள் நிறைந்த சாகச பயணம்.. -2 டிகிரி குளிரில் கார் ஓட்டிய அனுபவம்..

More from DriveSpark

Article Published On: Saturday, July 7, 2018, 15:33 [IST]
English summary
Andhra Pradesh: E-Autos to hit roads in Guntur. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+