Just In
- 58 min ago சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- 5 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 6 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 6 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
Don't Miss!
- News இந்திய எல்லையில் சியாச்சினுக்கு மிக அருகே.. சீனா அமைக்கும் புதிய சாலை! எதற்காக தெரியுமா? பகீர் தகவல்
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
புதிய ஏவுகணையை சோதித்து உலக நாட்டாமையின் பொட்டில் அறைந்த குழந்தைசாமி!
கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்து உலக நாட்டாமையாக விளங்கும் அமெரிக்காவை பொட்டில் அறைந்திருக்கிறது வடகொரியா.
தனது எதிரிகளான தென்கொரிய தலைநகர் சியோலையும், அமெரிக்காவையும் நினைத்த மாத்திரத்தில் தாக்குவதற்கு இந்த ஏவுகணையை பயன்படுத்தும் வல்லமையும், வாய்ப்பையும் தற்போது பெற்றிருப்பதாக வடகொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நீர்மூழ்கியிலிருந்து...
ஜப்பான் கடலில் நிறுத்தப்பட்டிருந்த நீர்மூழ்கி கப்பல் ஒன்றிலிருந்து இந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளது வடகொரியா.
வெற்றி, வெற்றி...
"இந்த ஏவுகணையை சோதித்திருப்பது கண்களை அகல விரிய செய்யும் அளவுக்கான மிகப்பெரிய வெற்றி. தென்கொரிய தலைநகர் சியோல் அல்லது அமெரிக்கா என எந்தவொரு பகுதியையும் தாக்குவதற்கு தேவைப்படும்போது பயன்படுத்த முடியும் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங்க் உன் தெரிவித்துள்ளார்.
பயண தூரம்
இந்த புதிய ஏவுகணையை 30 கிமீ தூரத்தில் உள்ள இலக்கை நோக்கி செலுத்தப்பட்டது என்றும் சில நொடிகளில், இலக்கு தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நீர்மூழ்கியிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகள் குறைந்தது 300 கிமீ தூரம் பயணித்தால் மட்டுமே வெற்றிகரமான சோதனையாக கருதப்படுகிறது.
எதிரிகளுக்கு ஆபத்து
நீர்மூழ்கியிலிருந்து ஏவுகணைகளை ஏவும் தொழில்நுட்பத்தில் வடகொரியா பெற்றிருக்கும் வல்லமை தென்கொரியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட எதிரிநாடுகளுக்கு பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது. எதிரிகளின் கண்களில் மண்ணை தூவி இந்த ஏவுகணையை செலுத்தும் வாய்ப்பு உள்ளதே அவர்களது கலக்கத்திற்கு காரணம்.
நேரில் பார்த்த அதிபர்
இந்த புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்து பார்க்கும் நிகழ்வை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பைனாகுலர் மூலமாக தளத்தின் அருகிலிருந்து நேரில் பார்வையிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த ஏவுகணை அனைத்து தொழில்நுட்பங்ப அம்சங்களிலும் வெற்றி பெற்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணு ஆயுத சோதனை
இந்த ஏவுகணையில் அணு ஆயுதத்தை வைத்து தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பல்வேறு நாட்டு ராணுவ வட்டாரங்கள் கருதுகின்றன.
ஐ.நா.சபை கண்டனம்
வடகொரியா புதிய ஏவுகணையை நீர்மூழ்கியிலிருந்து சோதனை செய்திருப்பது சர்வதேச ஆயுத ஒப்பந்தங்களை மீறிய செயல் என்று, இந்த ஏவுகணை சோதனைக்கு ஐ.நா.சபை கண்டனம் தெரிவித்துள்ளது.
பாலிஸ்டிக் ஏவுகணை
பாலிஸ்டிக் ஏவுகணைகள் நீண்ட தூர இலக்கை சென்று தாக்கும் திறன் கொண்டவை. இவை கண்டம் விட்டு கண்டம் பாயும் வல்லமையுடையது.
இலக்கு
முன்கூட்டியே திட்டமிட்ட பயணப்பாதையில் அரை வட்ட வடிவில் பயணித்து இலக்கை தாக்கும். ஏவிய பின்னர் இதன் பயணப்பாதையை மாற்ற இயலாது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
நீர்மூழ்கி கப்பல் காணாமல் போனாலும் கவலைப்படாத வடகொரியா!
Source: Daily Mail
-
இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!