Just In
- 1 hr ago சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- 6 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 6 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 7 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
Don't Miss!
- News 88 தொகுதிகள்.. இன்று 13 மாநிலத்தில் 2ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா, கர்நாடகாவிலும் ஓட்டுப்பதிவு
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பி.எஸ்.3 எஞ்சின் தடை எதிரொலி: பஜாஜ் நிறுவனம் மீது பஞ்சாப் டீலர்கள் குற்றச்சாட்டு
பி.டி.ஐ செய்தி நிறுவனம் பஜாஜ் நிறுவனத்திற்கு எதிராக பஞ்சாப் மாநில டீலர்கள் போர்கொடி தூக்கியுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. விவரங்களை பார்க்கலாம்.
சுற்றுச்சூழலை பாதுகாக்க உச்சநீதி மன்றம் பி.எஸ்.3 எஞ்சின்களுக்கு தடை விதத்தது. நாட்டில் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று எண்ணியிருந்த நிலையில், தள்ளுபடி விற்பனை, சதவீத அடிப்படையிலான விற்பனை என ஒருவிதமாக இந்த தீர்ப்பை இந்திய ஆட்டோமொபைல் கடந்து வந்துவிட்டது.
பி.எஸ்.3 எஞ்சினுக்கான தடை உத்தரவின் வீரியம் குறைந்து வந்த நிலையில், பஞ்சாப்பில் உள்ள பஜாஜ் வாகனங்களுக்கான டீலர்கள் மத்தியில் புதிய பிரச்சனை ஒன்று உருவாக்கியுள்ளது.
அங்கு மட்டும் பஜாஜ் நிறுவனத்தின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைக்குகள் விற்பனை ஆகாமல் உள்ளதாக பஞ்சாப் மாநிலத்தில் டீலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தில் பஜாஜ் நிறுவனத்திற்கு 40 மெயின் டீலர்களும் மற்றும் 200 சப்-டீலர்களும் இருக்கின்றனர். மொத்தமாக இவர்களிடம் பி.எஸ். 3 எஞ்சின் பொருத்தப்பட்ட 1000 பைக்குகள் விற்பனை ஆகாமல் இருப்பதாக, அங்குள்ள வட்டாரங்களிலிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் தற்போது, தேக்க நிலையில் இருக்கும் பி.எஸ்.3 எஞ்சின் கொண்ட 1000 பைக்குகளின் விற்பனை விலையை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தங்களுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என பஞ்சாபின் அனைத்து டீலர்களும் ஒட்டுமொத்தமாக கோரிக்கை வைத்துள்ளதாக தெரிகிறது.
மேலும் ஏப்ரல் 1 முதல் பி.எஸ்.3 எஞ்சினுக்காக தடை அமலாக்கப்பட்டதை தொடர்ந்து பஞ்சாபில் பஜாஜ் நிறுவனத்தின் எந்த பைக்குகளையும் டீலர்கள் விற்கவில்லை.
தற்போது பி.எஸ்.4 எஞ்சின் பொருத்தப்பட்ட பஜாஜ் நிறுவன பைக்குகள் விற்பனைக்கு வந்திருந்தாலும், இழப்பீடு வழங்கும்வரை அந்நிறுவனத்தின் வாகனங்களை விற்கமாட்டோம் என பஞ்சாப் டீலர்கள் ஒட்டுமொத்தமாக கூறிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஜாஜ் தயாரிப்புகளின் விற்பனையை பஞ்சாபில்
நிறுத்தப்பட்டுள்ள தகவலை பஜாஜ் நிறுவனம் முற்றிலுமாக மறுப்பு தெரிவிக்கிறது. மேலும் ஒரு சில டீலர்கள் உச்சநீதி மன்றத்தின் உத்தரவால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் இருந்தாலும் பஞ்சாபில் பஜாஜ் பைக்குகள் வழக்கம்போல விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
பஜாஜ் நிறுவனம் பி.எஸ்.4 எஞ்சின் கொண்ட பைக்கிற்கான தயாரிப்பு பணிகளை ஜனவரியில் தான் தொடங்கின. மேலும் கடந்த பிப்ரவரி மாதத்தின் போது, பிஸ்.3 எஞ்சினுக்கான தடை உத்தரவை கொஞ்சம் தள்ளிப்போடவேண்டு என நிர்வாக இயக்குநர் ராஜீவ் பஜாஜ் முதலில் மத்தியரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இருந்தாலும், ஏப்ரல் 1முதல் பி.எஸ்.3 எஞ்சினுக்கு தடை விதிப்பதில் உறுதியாக இருந்த உச்சநீதி மன்றம், பஜாஜ் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் உத்தரவை அமல்படுத்தியது. இதனால் நாட்டில் விற்பனையாகாத பைக்குகளை ஏப்ரல் 5 முதல் திரும்ப பெற்றுக்கொள்ளப்படும் என பஜாஜ் நிறுவனம் அறிவித்தது.
தற்போது பஞ்சாப் மாநிலத்தில் விற்பனையாகாத நிலையில் உள்ள 1000 இருச்சக்கர வாகனங்களின் நிலை என்ன என்பதை பஜாஜ் நிறுவனம் கண்டுகொள்ளவில்லை என டீலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் இதற்காக அந்நிறுவனத்திடம் முறையிட்டும் பலனில்லை என தெரிவிக்கின்றனர்.
பஜாஜ் நிறுவனத்தின் அலட்சியப்போக்கை கண்டித்து, பஞ்சாபில் கடந்த மூன்று நாட்களாக அனைத்து டீலர்களும் தங்களது விற்பனையகத்தை மூடி வைத்துள்ளனர்.
பி.எஸ்.3 எஞ்சினுக்காக தடை உத்தரவை அமல்படுத்தக்கூடிய சமயத்தில் உச்சநீதி மன்றத்தை அனுகிய பஜாஜ் பல்சர் 150சிசி மாடலில் 5100 பைக்குகள் பி.எஸ்.3 எஞ்சின் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் தடை உத்தரவை தள்ளிப்போட பரிசீலிக்க வேண்டும் என மனுவுல் கோரியிருந்தது.
மேலும் அதே மனுவில் பி.எஸ்.3 எஞ்சினுக்கான தடை உறுதிசெய்யப்படும் பட்சத்தில், பி.எஸ்.3 எஞ்சின் கொண்ட பஜாஜ் நிறுவனத்தின் 79,200 வாகனங்கள் விற்பனை செய்யப்படாமல் இருக்கும் என கூறியது. ஆனால் இவை எதையும் கேட்காமல் உச்சநீதி மன்றம் பி.எஸ்.3 எஞ்சினுக்கான தடையை உறுதி செய்தது.
மார்ச் 29க்கு பிறகு இந்தியாவின் அனைத்து வாகன உற்பத்தியாளர்களும், பி.எஸ்.3 எஞ்சின் கொண்ட வாகனங்களை அதிக தள்ளுபடியில் விற்றனர். இதில் பஜாஜ் நிறுவன்மும் இணைந்து வாகனங்களை ரூ. 3,500 முதல் ரூ.13,000 வரை விலை குறைத்து விற்றது.
பிறகு ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு நாட்டில் அனைத்து பி.எஸ்.3 எஞ்சின் கொண்ட வாகனங்கள் விற்கப்பட்டு விட்டதாக அனைத்து வாகன தயாரிப்பு நிறுவனங்களும் தெரிவித்தன. இதில் பஜாஜ் நிறுவனமும் இணைந்து கொண்டது. ஆனால் தற்போது பஞ்சாப் பஜாஜ் டீலர்களிடம் எழுந்துள்ள கோரிக்கை இதற்கு நேர்மாறாக உள்ளது.
தற்போது பஜாஜ் நிறுவனத்தின் பஞ்சாப் மாநில டீலர்கள் ஒட்டு மொத்தமாக குரலெழுப்பியுள்ள நிலையில், இன்னும் பல்வேறு மாநிலங்களில் இதுபோன்ற கோரிக்கைகளும் புகார்களும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மீது வைக்கப்படலாம் என்பது ஆட்டோமொபைல் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.
-
இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!