Just In
- 3 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 3 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 4 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 4 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கார்களுக்கு சொந்த பைனான்ஸ் துவங்காதது ஏன்?-ஒன்இந்தியாவுக்கு மாருதி அதிகாரி பேட்டி
பெங்களூரில் மாருதி ஸ்விப்ட் கார் அறிமுகம் செய்யும் விழா லலித் அசோக் ஓட்டலில் நடந்தது. விழாவில் மாருதி நிறுவனத்தின் சர்வீஸ் பிரிவு நிர்வாக அதிகாரி பங்கஜ் நரூல்லா, கார்ப்பரேட் இயக்குனர் கன்வல்ஜித் சிங் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கார் அறிமுகம் செய்யப்பட்ட பின் கன்வல்ஜித்சிங், ஒன்இந்தியா ஆட்டோமொபைல் சிறப்பு நிருபர் சேத்தன் கிருஷ்ணாவுக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
அப்போது, பல முன்னணி நிறுவனங்கள் கார் கடன் வழங்குவதற்கு சொந்த பைனான்ஸ் துவங்கியுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட சொகுசு கார் நிறுவனங்கள் கூட சொந்த பைனான்சை நடத்தி வருகின்றன. ஆனால், நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான மாருதி ஏன் சொந்த பைனான்சை துவங்கவில்லை. விற்பனை குறைந்ததற்கு சொந்த பைனான்ஸ் இல்லாததும் ஒரு காரணமா? என கேள்விகள் அடுக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த கன்வல்ஜித் சிங் கூறியதாவது:
"கார் தயாரிப்பில் நாங்கள் சிறந்து விளங்குகிறோம். அதேவேளை, பைனான்ஸ் நிறுவனத்தை தனிப்பிரிவாக மட்டுமே துவங்க முடியும் என்பதால், அதில் போதுமான கவனம் செலுத்துவது கடினம். எங்களது கவனம் எல்லாம் தரமான கார்களை மக்களுக்கு தயாரித்து வழங்கவேண்டும் என்பதே.
மேலும், மார்க்கெட்டில் கார் கடன் வழங்கும் சேவைகளை ஏராளமான வங்கிகளும், நிதி நிறுவனங்களும் செய்து வருகின்றன. கார் விற்பனையை அதிகரிக்க சொந்த பைனான்ஸ் நிறுவனம் மூலம் கடன் வழங்குவது ஒரு குறைந்த கால திட்டமாக மட்டுமே இருக்கும். எங்களது திட்டங்கள் நீண்ட கால அடிப்படையில் வகுக்கப்படுகின்றன.
எனவே, எதிர்காலத்திலும் சொந்த பைனான்ஸ் துவங்கும் திட்டம் இல்லை. கார் விற்பனையை அதிகரிக்க சலுகைகளை வழங்குகிறோம். கார் விற்பனைக்கு தக்கவாறு உற்பத்தியை கூட்டி குறைத்துக்கொள்கிறோம்," என்று கூறினார்.
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!