ஆண்டுக்கு 30,000 கார்கள் விற்பனை செய்ய பிஎம்டபிள்யூ திட்டம்

சொகுசு கார் மார்க்கெட்டில் முதலிடத்தில் இருக்கும் பிஎம்டபிள்யூ நிறுவனத்துக்கு ஆடி கார் நிறுவனத்தால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பிஎம்டபிள்யூவின் விற்பனைக்கும், ஆடியின் கார் விற்பனைக்கும் அதிக எண்ணிக்கையிலான வித்தியாசம் இல்லை. இந்த நிலையில், ஆண்டுக்கு 30,000 கார்களை விற்பனை செய்வதற்கான முயற்சிகளை பிஎம்டபிள்யூ மேற்கொண்டுள்ளது.
ஆண்டுக்கு 30,000 கார்கள் என்ற விற்பனையை அடையும்போது, தனது அனைத்து கார் மாடல்களையும் இந்தியாவிலேயே முழுக்க முழுக்க உற்பத்தி செய்யவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு இறுதி முதல் இந்தியாவில் கார் முழுமையான கார் உற்பத்தியை துவங்கவும் திட்டம் வைத்துள்ளது. மேலும், அதிக அளவில் புதிய மாடல்களையும் களமிறக்கவும் முடிவு செய்துள்ளது.
தற்போது நிர்ணயிக்கப்பட்டிருக்கும் இந்த புதிய இலக்கை அடைவதன் மூலம் எளிதாக முதலிடத்தை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்பது பிஎம்டபிள்யூவின் எண்ணம். மேலும், மினி பிராண்டு கார்களுக்கு தனியாக ஷோரூம்களை திறக்கவும் முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








