பெட்ரோலுக்கு குட்பை.. ஐஸ்கிரீமில் ஓடப்போகும் கார்கள்!

வாகனங்களில் பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் போன்ற மரபு எரிபொருள்களால் சுற்றுச் சூழலுக்கு தீங்கு ஏற்பட்டு வருகிறது. எனவே, மாற்று எரிபொருள் தொழில்நுட்பத்தை கண்டறிவதில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்ட்டர் பல்கலைகழகத்தை சேர்ந்த நிக் டர்னர் தலைமையிலான ஆய்வாளர்கள் அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்களில் இருக்கும் ஹைட்ரோகார்பன்கள் மூலம் கார்களை இயக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.
ஐஸ்கிரீம், குளியல் சோப் மற்றும் ஷாம்பூ என அனைத்திலும் இருக்கும் ஹைட்ரோகார்பன்களை கார்களுக்கான எரிபொருளாக பயன்படுத்த முடியும் என அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
மேலும், இது குறித்த ஆராய்ச்சியை தீவிரப்படுத்தியிருக்கும் இந்த ஆய்வுக் குழுவினர் விரைவில் முழுமையான ஆய்வறிக்கையை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications








