மைசூர் மஹாராஜாவின் பழமை வாய்ந்த சாரட் வண்டி விரைவில் ஏலம்
மைசூர் மஹாராஜாவுக்கு சொந்தமான 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த சாரட் வண்டி வரும் 24ந் தேதி லண்டனில் ஏலம் விடப்பட உள்ளது.

16 ஜன்னல்களுடன் இணைக்கப்பட்டதாக உருவாக்கப்பட்ட இதன் உட்புறத்திலும் அழகான வேலைப்பாடுகளை கொண்டது. வெளிப்புறத்தில் 2 பணியாளர்கள் அமரும் வகையில் இருக்கை வசதியும் கொண்டிருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக இங்கிலாந்தை சேர்ந்தவர் வசம் இந்த சாரட் வண்டி இருக்கிறது. இந்த நிலையில், வரும் 24ந் தேதி ஹிஸ்டாரிக்ஸ் என்ற ஏல நிறுவனம் மூலம் லண்டனில் இந்த சாரட் வண்டி ஏலம் விடப்பட உள்ளது. இந்த சாரட் வண்டி ரூ.70 லட்சத்துக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








