மேம்படுத்தப்பட்ட புதிய ரெக்ஸ்டன் எஸ்யூவி: சாங்யாங் அறிமுகம்
மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய புதிய ரெக்ஸ்டன் எஸ்யூவியை பூஷன் மோட்டார்ஷோவில் சாங்யாங் மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது.
தென்கொரியாவை சேர்ந்த சாங்யாங் மோட்டார்ஸ் நிறுவனம் எஸ்யூவி கார் தயாரிப்பில் புகழ்பெற்றது. நிதி நிலைமையில் சிக்கி தவித்த சாங்யாங் மோட்டார்சை கடந்த ஆண்டு மஹிந்திரா வாங்கியது.

அதுமுதல் சாங்யாங் மோட்டார்ஸ் நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. இந்த நிலையில், சந்தை போட்டியை சமாளிக்கும் வகையில் தனது மாடல்களை மேம்படுத்தி வருகிறது.
அந்த வகையில், மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய புதிய ரெக்ஸ்டன் டபிள்யூ என்ற புதிய ரெக்ஸ்டன் எஸ்யூவியை பூஷன் மோட்டார் ஷோவில் சாங்யாங் மோட்டார்ஸ் பார்வைக்கு வைத்திருக்கிறது.
பிரிமியம் ரகத்தை சேர்ந்த இந்த எஸ்யூவி மாடலை இந்தியாவில் மஹிந்திரா விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டிருக்கிறது. எனவே, இந்த புதிய ரெக்ஸ்டன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
புதிய ரெக்ஸ்டன் எஸ்யூவியின் இ-எக்ஸ்டிஐ200 எல்இடி டீசல் எஞ்சின் 155 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக இருக்கும் என்பதோடு, லிட்டருக்கு 13.7 கிமீ மைலேஜ் செல்லும் வகையில் இருக்கும் என சாங்யாங் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








