தமிழக அரசு போக்குவரத்து கழகத்துக்கு 2,610 பஸ்களை சப்ளை செய்யும் லேலண்ட்!
தமிழக அரசு போக்குவரத்துக்கு கழகத்துக்கு 2,610 சப்ளை செய்வதற்கான பல்க் ஆர்டரை அசோக் லேலண்ட் நிறுவனம் பெற்றுள்ளது.
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் நாள்தோறும் 21,000 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், பல ஆண்டுகளாக ஓடும் பழைய பஸ்களுக்கு பதிலாக புதிய பஸ்கள் ஆண்டுதோறும் வாங்கப்படுகின்றன.

இந்த ஆண்டும் 3,000 பஸ்களை வாங்க இருப்பதாக சில மாதங்களுக்கு முன் தமிழக அரசு அறிவித்தது. இதற்கான டெண்டரும் விடப்பட்டது. இந்த நிலையில், தமிழக அரசு போக்குவரத்து கழகத்துக்கான புதிய பஸ்களை சப்ளை செய்யும் ஆர்டரை அசோக் லேலண்ட் பெற்றுள்ளது.
மொத்தம் 2,610 பஸ்களை அசோக் லேலண்ட் சப்ளை செய்ய உள்ளது. இதற்காக, தமிழக அரசுக்கு அசோக் லேலண்ட் நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது. இந்த ஆர்டரின் மதிப்பு உள்ளிட்ட பிற விபரங்கள் வெளியிடப்படவில்லை.


Click it and Unblock the Notifications








