பிஎம்டபிள்யூவை தொடர்ந்து கார் விலை உயர்த்தும் ஆடி
வரும் ஜனவரி முதல் தேதியிலிருந்து ஆடி சொகுசு கார்களின் விலை கணிசமாக உயர்த்தப்பட உள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன் பிஎம்டபிள்யூ நிறுவனம் கார் விலையை 10 சதவீதம் வரை உயர்த்துவதாக அறிவித்தது.
இதைத்தொடர்ந்து, தற்போது ஆடி கார் நிறுவனமும் 3 முதல் 5 சதவீதம் வரை விலை உயர்வை அறிவித்துள்ளது. பல்வேறு பொருளாதார ரீதியிலான அம்சங்களையும், வளர்ச்சியையும் கருதி விலை உயர்வை அறிவிப்பதாக தெரிவித்துள்ளது.

இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் மிக வலுவான பங்களிப்பை பெற்றிருக்கும் ஆடி நிறுவனம் ரூ.27.93 லட்சம் முதல் ரூ.2.14 கோடி விலையிலான செடான், எஸ்யூவி மற்றும் ஸ்போர்ட்ஸ் ரக கார்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications








