சென்னை ஆலையில் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் உற்பத்தி துவங்கியது!
சென்னையிலுள்ள பிஎம்டபிள்யூ கார் ஆலையில் 7 சீரிஸ் காரின் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது. இறக்குமதி வரி, சந்தை போட்டியால் பல நிறுவனங்கள் இந்தியாவிலேயே கார் உற்பத்தி செய்வதை தீவிரமாக்கி வருகின்றன.
அந்த வகையில், ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் நிறுவனமான பிஎம்டபிள்யூ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரின் உற்பத்தியை சென்னை ஆலையில் துவங்கியிருக்கிறது.

ஏப்ரல் மாதம் ஜோத்பூர் அரண்மனையில் நடந்த பிரம்மாண்ட விழாவில் ஜோத்பூர் மஹாராஜா கஜ் சிங் மற்றும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் முன்னிலையில் இந்த புதிய கார் அறிமுகம் செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.
பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் ரூ.92.9 லட்சம் முதல் ரூ.1.73 கோடி வரையில் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








