சாலை விபத்துக்களுக்கு பகல் கனவும் முக்கிய காரணம்: ஆய்வில் தகவல்
சாலை விபத்துக்களுக்கு பகல் கனவு கண்டுகொண்டே வாகனத்தை இயக்குவதும் முக்கிய காரணமாக இருக்கிறது என அமெரிக்க போலீசார் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
வாகனங்களை ஓட்டும்போது கவனச் சிதறலால் அதிக விபத்துக்கள் ஏற்படுகிறது. மொபைல்போன் பேசுவதாலும், சக பயணிகளுடன் பேசிக் கொண்டே வரும்போதும் கவனச் சிதறல் ஏற்பட்டு விபத்துக்களுக்கு காரணமாகிறது.

இந்த நிலையில், வாகனம் ஓட்டும்போது பலர் வேறு விஷயங்களில் கவனத்தை செலுத்தும்போது தன்னை மறந்துவிடுவதும் விபத்துக்கு காரணமாக அமெரிக்க போலீசாரின் சமீபத்திய ஆய்வு கூறுகிறது. அமெரிக்காவில் நடைபெறும் மோசமான விபத்துக்களில் 10 சதவீதம் இதுபோன்று தன்னை மறந்த வாகனத்தை இயக்கும் பகல் கனவு டிரைவர்களால் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, 12 சதவீத விபத்துக்கள் மொபைல்போன் பேசுவதால் ஏற்படுவதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த எரி இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம் இந்த புள்ளிவிபரங்களை வழங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








