இந்தியாவில் ஃபெராரி டிராக்டர் அறிமுகம்!
இந்தியாவில் ஃபெராரி டிராக்டரை எஸ்கார்ட்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ரூ.8 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த புதிய உயர் ரக டிராக்டர் விவசாய தேவைகளை கச்சிதமாக பூர்த்தி செய்யும் என எஸ்கார்ட்ஸ் தெரிவித்துள்ளது. சொகுசான டிரைவிங் மற்றும் கூடுதல் வசதிகளை இந்த டிராக்டர் வழங்கும்.
இதுதவிர, ஃபார்ம்டிராக் பிராண்டில் புதிய உயர் ரக டிராக்டரையும் எஸ்கார்ட்ஸ் விற்பனைக்கு விட்டுள்ளது. ஃபார்ம் டிராக்டரிலும் கூடுதல் வசதிகள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய டிராக்டர்கள் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

ஃபெராரி டிராக்டர்
இத்தாலியை சேர்ந்த ஃபெராரியின் விவசாயக் கருவிகள் தயாரிக்கும் பிரிவான பிசிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து எஸ்கார்ட்ஸ் இந்த உயர் ரக டிராக்டரை அறிமுகம் செய்துள்ளது.

எஞ்சின்
ஃபெராரி பிராண்டின் ஆரம்ப நிலை மாடலான இந்த டிராக்டரில் 26 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. ரூ.8 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

அம்சங்கள்
திராட்சை தோட்ட விவசாயப் பணிகளுக்கு ஏற்ற வசதிகளை இந்த டிராக்டர் கொண்டிருக்கிறது.

ஃபார்ம்டிராக் எக்ஸிகியூட்டிவ் சீரிஸ்
அதிர்வுகள் குறைவான இருக்கைகள், புதிய தொழில்நுட்பம் கொண்ட பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் இதர பாதுகாப்பு வசதிகளை இந்த டிராக்டர் கொண்டிருக்கிறது.

ஃபார்ம்டிராக்கின் புதிய மாடல்கள்
45 எச்பி, 50 எச்பி மற்றும் 60 எச்பி மாடல்களில் விற்பனைக்கு வந்திருக்கிறது. இவை முறையே ரூ.6.5 லட்சம், ரூ.6.9 லட்சம் மற்றும் ரூ.7.4 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








