கோவையில் 2 டோர் புன்ட்டோ அபார்த் சோதனை!
கோவையில் புன்ட்டோ அபார்த் கார் சமீபத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதுவும் எவோ எஸ்ஸிஎஸ்ஸி பேட்ஜ் கொண்ட ஹைவேரியண்ட் கார் சோதனை செய்யப்பட்டிருக்கிறது. அந்த காரை டீம் பிஎச்பி.,யை சேர்ந்த ஒருவர் கேமராவில் கிளிக்கியிருக்கிறார். கோவையில் சோதனை செய்யப்பட்ட புன்ட்டோ அபார்த் 2 டோர் வெர்ஷன்.
புன்ட்டோ அபார்த் கார் அறிமுகத்தை ஃபியட் உறுதி செய்துள்ள நிலையில், 2 டோர் கார் சோதனை செய்யப்பட்டிருக்கிறது. டிசைன், பவர் என அனைத்திலும் வேறுபட்ட இந்த புன்ட்டோ காரின் சோதனை செய்யப்பட்டபோது எடுத்த படத்தை ஸ்லைடரில் காணலாம்.

பவர்ஃபுல் கார்
இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் 1.3 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்180 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.

டாப் ஸ்பீடு
மணிக்கு அதிகபட்சம் 216 கிமீ வரை செல்லும் திறன் கொண்டது. 0-100 கிமீ வேகத்தை 7.6 வினாடிகளில் தொட்டுவிடும்.

இறக்குமதி
ஒருவேளை இந்தியாவில் இந்த 2 டோர் புன்ட்டோ அபார்த் விற்பனைக்கு வந்தால் நிச்சயம் இறக்குமதி செய்யப்பட்டே விற்பனை செய்யப்படும்.

ஸ்டான்டர்டு மாடல்
இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் சாதாரண அபார்த் மாடல் 1.4 லிட்டர் டி-ஜெட் எஞ்சினுடனும், பிரத்யேக சஸ்பென்ஷன் கொண்டதாகவும் இருக்கும்.


Click it and Unblock the Notifications








