ஜூனில் அறிமுகமாகிறது ஃபியட் புன்ட்டோ அபார்த்!
வரும் ஜூன் மாதம் பெர்ஃபார்மென்ஸ் விரும்பிகளுக்கான புன்ட்டோ அபார்த் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது ஃபியட். டாடா மோட்டார்ஸ் துணையுடன் கார் விற்பனை செய்து வந்த இத்தாலிய நிறுவனமான ஃபியட் தற்போது தனித்து களமிறங்கியிருக்கிறது. அடுத்தடுத்து நாட்டின் முக்கிய நகரங்களில் புதிய டீலர்ஷிப்புகளை திறந்து வருகிறது. மேலும், டீலர்களுக்கு வலுசேர்க்கவும், விற்பனையை அதிகரிக்கவும் மொத்தம் 9 புதிய மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.
இதில், முதலாவதாக வரும் ஜூனில் புன்ட்டோ அபார்த் பெர்ஃபார்மென்ஸ் எடிசன் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது ஃபியட். டாடா மோட்டார்ஸ் கூட்டணியிலிருந்து வெளியே வந்த பின்பு ஃபியட் அறிமுகப்படுத்தும் முதல் கார் மாடலாக அபார்த் வருகிறது. இந்த கார் புனே அருகே ரஞ்சன்கானிலுள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது. அபார்த் காரை தொடர்ந்து ஜீப் ரேங்லர் மற்றும் கெரோக்கீ கார்களை அக்டோபரில் அறிமுகம் செய்ய இருக்கிறது ஃபியட்.

ஃபியட் புன்ட்டோ அபார்த் - படங்கள்

ஃபியட் புன்ட்டோ அபார்த் - படங்கள்

ஃபியட் புன்ட்டோ அபார்த் - படங்கள்

ஃபியட் புன்ட்டோ அபார்த் - படங்கள்

ஃபியட் புன்ட்டோ அபார்த் - படங்கள்



Click it and Unblock the Notifications








