ரூபாய் மதிப்பு சரிவு எதிரொலி... கார் விலையை உயர்த்திய ஃபோர்டு
ரூபாய் மதிப்பு சரிவு எதிரொலியாவில் கார் விலையை 5 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது ஃபோர்டு. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாடலுக்கு தகுந்தவாறு 1 முதல் 5 சதவீதம் வரை இந்த விலை உயர்வு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு விலை உயர்த்தப்பட்டிருக்கிறது என்பது குறித்த தகவலை வெளியிடவில்லை.

ரூபாய் மதிப்பு எதிரொலியாவில் உற்பத்தி செலவீனம் கணிசமாக அதிகரித்துள்ளதையடுத்து இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாததாகிவிட்டது என்று ஃபோர்டு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஎம்டபிள்யூ, ஆடி, பென்ஸ். ஜெனரல் மோட்டார்ஸ், டொயோட்டா ஆகிய நிறுவனங்கள் கார் விலையை உயர்த்தியுள்ள நிலையில், தற்போது ஃபோர்டு நிறுவனமும் கார் விலையை உயர்த்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications








