சென்னை ஆலையில் ஈக்கோஸ்போர்ட் உற்பத்தி துவங்கியது
சென்னை, மறைமலை நகரிலுள்ள ஃபோர்டு ஆலையில் ஈக்கோஸ்போர்ட் உற்பத்தி துவங்கப்பட்டுவிட்டது. எனவே, அடுத்த 10 நாட்களில் இந்த புதிய எஸ்யூவி விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காருக்கான முன்பதிவு நாடு முழுவதும் உள்ள ஃபோர்டு டீலர்களில் ஈக்கோஸ்போர்ட்டுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது. ரூ.50,000 முன்பணமாக செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்ட மாடல்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. ரூ.6 லட்சம் ஆரம்ப விலையில் இந்த புதிய கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








