ரூபாய் மதிப்பு எதிரொலி: கார் விலையை உயர்த்த ஜிஎம் முடிவு
அனைத்து கார் மாடல்களின் விலையையும் ரூ.10,000 வரை அதிகரிக்க ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு பாதையில் செல்கிறது. இதன் எதிரொலியாக பல கார் நிறுவனங்களின் வருவாயில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ரூபாய் மதிப்பு சரிவால் ஏற்பட்டு வரும் வருவாய் இழப்பை சரிகட்ட கார் விலையை உயர்த்துவதே ஒரு வழி என்ற முடிவுக்கு ஜெனரல் மோட்டார்ஸ் வந்துவிட்டது.
செப்டம்பர் முதல் வாரம் முதல் கார்களின் விலையை 1.5 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளது. இதனால், மாடலுக்கு தக்கவாறு ரூ.2,000 வரை ரூ.10,000 வரை செவர்லே கார் விலை உயருகிறது.


Click it and Unblock the Notifications








