24 மணி நேர சாலை அவசர உதவி திட்டம்: செவர்லே அறிமுகம்
செவர்லே கார் உரிமையாளர்கள் 24 மணி நேரமும் சாலை அவசர உதவியை பெறுவதற்கான புதிய திட்டத்தை ஜெனரல் மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது. வரும் ஜனவரி முதல் தேதியிலிருந்து இத்திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது.
மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பேட்டரி மற்றும் டயர்கள் உள்ளிட்டவற்றில் ஏற்படும் பிரச்னைகளை சரி செய்து தரும் விதத்தில் இந்த புதிய சேவை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த புதிய சேவை திட்டத்தை செவர்லே கார்களுக்கான வாரண்டியின் கீழ் பெறலாம். ஓர் ஆண்டுக்கு ரூ.1000, மூன்றாண்டுகளுக்கு ரூ.2,700 செலுத்தி இந்த சேவை திட்டத்தில் இணைந்து கொள்ளலாம் என்று ஜெனரல் மோட்டார்ஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








