பிரியோ அடிப்பைடையில் உருவாகும் ஹோண்டாவின் புதிய எம்பிவி!

அமேஸ் செடானை தொடர்ந்து பிரியோ அடிப்படையில் புதிய எம்பிவி காரை ஹோண்டா வடிவமைத்து வருகிறது. வரும் செப்டம்பரில் இந்தோனேஷியாவில் நடைபெற இருக்கும் மோட்டார் ஷோவில் இந்த புதிய கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
அமேஸ் செடானும் முதலில் இந்தோனேஷிய மார்க்கெட்டில்தான் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்பின்னர், இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. எனவே, இந்த புதிய எம்பிவி காரும் இந்தோனேஷியாவில் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ஹோண்டா முழுமையான தகவல்களை தெரிவிக்காவிட்டாலும், அடுத்த ஆண்டு பிற்பகுதியில் இந்த புதிய எம்பிவி காரை இந்தியாவில் ஹோண்டா விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








