ஹூண்டாய் கார் விலையும் ரூ.20,000 வரை உயர்கிறது!!

ரூபாய் மதிப்பில் நிலவும் ஏற்ற இறக்கத்தால் கார் நிறுவனங்களின் வருவாயில் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
இதனால், அடிக்கடி கார்களின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. ஜனவரி முதல் தேதியிலிருந்து பல நிறுவனங்கள் கார் விலையை உயர்த்திவிட்டன.
மாருதி நிறுவனம் நேற்று முதல் கார் விலையை உயர்த்தியுள்ளது. இந்த வரிசையில் தற்போது நாட்டின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பாளரான ஹூண்டாயும் விலை உயர்வை அறிவித்துவிட்டது.
பிப்ரவரி முதல் தேதியிலிருந்து கார்களின் விலையை மாடலுக்கு தக்கவாறு ரூ.20,000 அதிகரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.


Click it and Unblock the Notifications








