அக்டோபர் முதல் ஹூண்டாய் கார் விலை உயர்கிறது!!
அக்டோபர் 1ந் தேதி முதல் ஹூண்டாய் கார்களின் விலை ரூ.20,000 வரை உயர்கிறது. சமீபத்தில் விற்பனைக்கு வந்த கிராண்ட் ஐ10 காரின் விலை மட்டும் உயர்த்தப்படவில்லை.
ரூபாய் மதிப்பில் ஏற்ற இறக்கங்கள் காரணமாக கார்களுக்கான உற்பத்தி செலவீனம் கணிசமாக உயர்வதாக கூறி பெரும்பாலான கார் நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்து வருகின்றன.

இந்த பட்டியலில் தென் கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்சும் இணைந்து கொண்டுள்ளது.
உற்பத்தி செலவீனத்தை காரணம் காட்டி அனைத்து கார் மாடல்களின் விலையையும் ரூ.4,000, முதல் ரூ.20,000 வரை உயர்த்துவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
வரும் 1ந் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருவதாக ஹூண்டாய் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3ந் தேதி விற்பனைக்கு வந்த கிராண்ட் ஐ10 காரின் விலையை மட்டும் அந்த நிறுவனம் உயர்த்தவில்லை.


Click it and Unblock the Notifications








