கோவையில் பிரம்மாண்ட ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் ஷோரூம் திறப்பு!
உலகத் தரம் வாய்ந்த அம்சங்களுடன் 50,000 சதுர அடி பரப்பில் இந்த ஷோரூம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மிகப்பெரிய ஷோரூமில் ஒரே நேரத்தில் 12 கார்களை பார்வைக்கு நிறுத்த முடியும்.
ஒரே நேரத்தில் 14 கார்களை சர்வீஸ் செய்யும் வசதி கொண்ட சர்வீஸ் மையமும் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து இரண்டாவது ஷோரூமாக இது திறக்கப்பட்டுள்ளது.

இந்த ஷோரூமில் ஜாகுவார் பிராண்டின் ஜாகுவார் எக்ஸ்ஜே, ஜாகுவார் எக்ஸ்கேஆர் மற்றும் ஜாகுவார் எஃப் டைப் ஆகிய கார்கள் விற்பனைக்கு கிடைக்கும்.
இதேபோன்று, லேண்ட்ரோவர் பிராண்டில் புதிய ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட், ரேஞ்ச்ரோவர், ரேஞ்ச்ரோவர் எவோக், டிஸ்கவரி 4 மற்றும் ஃப்ரீலேண்டர் 2 ஆகிய ஆடம்பர எஸ்யூவிகளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, ஒட்டர் பாளையத்தில் இந்த புதிய கார் ஷோரூம் அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications








