12ல் லம்போர்கினி டிராக்டர்கள் அறிமுகம்: ராணிப்பேட்டையில் தயாராகிறது
சூப்பர் கார்கள் மூலம் புகழ்பெற்ற லம்போர்கினி பிராண்டில் வெளிவரும் டிராக்டர்கள் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. வரும் 12ந் தேதி புனேயில் நடைபெற இருக்கும் விவசாய கருவிகளுக்கான கண்காட்சியில் லம்போர்கினி டிராக்டர்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளன.
லம்போர்கினி டிராக்டர் தயாரிக்கும் பிரிவு தற்போது இத்தாலியை சேர்ந்த சேம் டைட்ஸ் ஃபார்(எஸ்டிஎஃப்) என்ற நிறுவனத்திடம் உள்ளது. 1973ம் ஆண்டு முதல் எஸ்டிஃஎப் நிறுவனத்தின் கீழ் லம்போ டிராக்டர் தயாரிப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. இருப்பினும், தொடர்ந்து லம்போர்கினி பிராண்டிலேயே டிராக்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

கோல்ஃப் மைதானங்கள், சொகுசு விடுதிகள், கிரிக்கெட் மைதானங்கள் மற்றும் பெரும் நிலக்கிழார்கள் உள்ளிட்ட வாடிக்கையாளர்களை இலக்கு வைத்து லம்போ டிராக்டர்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. தமிழ்நாட்டில் ராணிப்பேட்டையில் உள்ள எஸ்டிஎஃப் ஆலையில் லம்போர்கினி உயர் ரக டிராக்டர்கள் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








