சாங்யாங் ரெக்ஸ்டனுக்கு அமோக வரவேற்பு: உற்பத்தியை கூட்டும் மஹி்ந்திரா

தென்கொரியாவை சேர்ந்த சாங்யாங் பிராண்டில் முதலாவதாக ரெக்ஸ்டன் எஸ்யூவியை அக்டோபரில் மஹிந்திரா விற்பனைக்கு கொண்டு வந்தது.
பிரியமியம் ரகத்தில் நிலைநிறுத்தப்பட்ட ரெக்ஸ்டனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரெக்ஸ்டன் எஸ்யூவிக்கு 2 மாத காலம் காத்திருப்பு காலம் இருக்கிறது.
டிசம்பர் வரையில் 1,300 பேர் முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். இந்த நிலையில், ரெக்ஸ்டன் காத்திருப்பு காலத்தை குறைக்கும் நடவடிக்கைகள் மஹிந்திரா துவங்கியிருக்கிறது.
ஜனவரி முதல் ரெக்ஸ்டன் எஸ்யூவியின் உற்பத்தியை மாதத்திற்கு 500 கார்கள் என்ற அளவில் உயர்த்துவதற்கு முடிவு செய்துள்ளது.
இதேபோன்று, குவான்ட்டோ, எக்ஸ்யூவி 500 கார்களின் உற்பத்தியை உயர்த்தவும் திட்டமிட்டுள்ளதாக மஹிந்திரா உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








