வாகன உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தும் மஹிந்திரா!
இருப்பு தேங்குவதை தவிர்க்கும் விதமாக வாகன உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க இருப்பதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே வாகன மார்க்கெட் படு மந்தமாக இருந்து வருகிறது. பல முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்த மந்த நிலையால் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன.

மேலும், இருப்பு தேங்குவதை தவிர்க்கும் விதமாக பல முன்னணி நிறுவனங்கள் வாகன உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. அந்த வரிசையில் மஹிந்திராவும் இணைந்துகொண்டுள்ளது.
இந்த மாதம் 8 நாட்கள் ஆலைகளில் வாகன உற்பத்தியை நிறுத்தி வைக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. விற்பனைக்கு தகுந்தாற்போல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் மஹிந்திராவின் கார் விற்பனை 7 சதவீதம் குறைந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








