உத்தரகாண்ட் மீட்பு பணிகளுக்கு 5 ஆம்புலன்ஸ் வழங்கும் மாருதி!

By Saravana
Maruti Omni Ambulance
உத்தரகாண்டை புரட்டி போட்ட இயற்கை பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ வசதிக்காகவும், அவசர உதவிகளுக்கு உதவும் வகையிலும் 5 ஓம்னி ஆம்புலன்ஸ்களை மாருதி கார் நிறுவனம் வழங்க உள்ளது.

உத்தரகாண்டில் சமீபத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்தால் மிகப் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டன. மேலும், 10,000 பேர் வரை உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.

70,000 பேரை காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், அங்கு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சைக்கு உதவும் வகையில் 5 ஆம்புலன்ஸ்களை மாருதி வழங்க உள்ளது.

மேலும், மாருதி தொழிலாளர்களின் ஒருநாள் ஊதியமான ரூ.1.56 கோடி பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கப்படுகிறது. அங்கு புனரமைப்பு பணிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என மாருதி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேபோன்று, மஹிந்திரா நிறுவனம் வெள்ள பாதிப்புகளுக்கு உதவும் வகையில், உத்தரகாண்ட் முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, July 6, 2013, 13:34 [IST]
English summary
Maruti Suzuki will be supplying a total of 5 Omni Ambulances so as to cater to the medical and emergency needs of all victims at flood ravaged regions of Uttarakhand.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+