அக்.1 முதல் கார் விலையை ரூ.10,000 வரை உயர்த்தும் மாருதி
ரூபாய் மதிப்பு ஏற்ற இறக்கங்களால் அக்டோபர் முதல் மாருதி கார் விலை ரூ.10,000 வரை அதிகரிக்கிறது.
ரூபாய் மதிப்பில் நிலவிய ஸ்திரத்தன்மையன்ற போக்கால் கார் நிறுவனங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன. அனைத்து நிறுவனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக கார் விலையை உயர்த்தி வருகின்றன.

இந்த வரிசையில் தற்போது மாருதி கார் நிறுவனமும் இணைந்து கொண்டுள்ளது. அனைத்து கார் மாடல்களின் விலையையும் ரூ.3,000 முதல் ரூ.10,000 வரை அதிகரிக்க இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விலை உயர்வு அக்டோபர் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என மாருதியின் சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனைப் பிரிவு தலைமை அதிகாரி மாயங்க் பரீக் கூறியிருக்கிறார்.
ரூபாய் மதிப்பில் நிலவிய ஏற்ற இறக்கங்களை காரணம் காட்டி கடந்த ஜனவரி மாதத்தில் மாருதி நிறுவனம் கார் விலையை உயர்த்தியது. இந்த நிலையில், நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக கார் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது மாருதி.


Click it and Unblock the Notifications








