நாளை முதல் மாருதி கார் விலை ரூ.20,000 வரை உயர்கிறது

Maruti Dzire
அனைத்து கார்களின் விலையையும் ரூ.20,000 வரை உயர்த்துகிறது மாருதி. நாளை முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருவதாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூபாய் மதிப்பில் நிலவும் ஏற்ற இறக்கமான நிலையால் மாருதி வருவாயில் இழப்பு ஏற்பட்டு வருகிறது. நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் மட்டும் அந்த நிறுவனத்துக்கு ரூ.227.45 கோடி அளவுக்கு நிகர லாபத்தில் இழப்பு ஏற்பட்டது. ஒட்டுமொத்தமாக ரூ.350 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக மாருதி தெரிவித்துள்ளது.

வருவாயில் ஏற்பட்டு வரும் தொடர் இழப்பை சரிகட்டுவதற்காக கார் விலையை உயர்த்துவதாக மாருதி அறிவித்துள்ளது. மாருதி 800 முதல் கிசாஷி வரை அனைத்து மாடல்களின் விலை அதிகபட்சமாக ரூ.20,000 வரை உயர்கிறது. நாளை முதல் இந்த விலை உயர்வு டீலர்களில் அமலுக்கு வருகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 15, 2013, 17:05 [IST]
English summary
Country's largest car maker Maruti Suzuki India today said it will increase prices of its vehicles across models by up to Rs 20,000 from tomorrow to offset pressure of adverse currency fluctuation.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+