Just In
- 10 min ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 36 min ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 53 min ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
- 1 hr ago பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
Don't Miss!
- News இந்த ஆண்டு UPSC தேர்வானவர்களில் 34.65% பெண்கள், 5.02% முஸ்லிம்கள்.. முழு டேட்டா இதோ!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்கு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Lifestyle ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- Sports கே எல் ராகுல் செய்த செயல்.. எச்சரித்த தோனி.. ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கிடைத்த தண்டனை
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Movies கவினுடன் கிளாஷ் விடும் சந்தானம்.. யாரு கிங்குன்னு மே 10ம் தேதி தெரியும் என கலாய்க்கும் ரசிகர்கள்!
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
2020 வரை இதே பான்டம்தான்.. ரோல்ஸ்ராய்ஸ் கூறும் நியாயமான காரணம்
மொபைல்போன் மார்க்கெட்டுக்கு அடுத்தாக ஆட்டோமொபைல் துறையில்தான் அதிக அளவில் புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் நிகழ்வு நித்தமும் நடந்து வருகிறது. புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட மாடல் என மாதத்தில் பாதி நாள் கார் மாடல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இடையில் ஏதாவது ஒரு காரணத்தை வைத்து ஸ்பெஷல் எடிசன் மாடல்கள் வேறு அறிமுகம் செய்யப்படுகின்றன.
மார்க்கெட் பங்கை தக்க வைத்துக் கொள்ளவும், போட்டியை சமாளித்து வாடிக்கையாளர்களை கவரவும் கார் நிறுவனங்களுக்கு வேறு வழியுமில்லை. ஆனால், ரோல்ஸ்ராய்ஸ் இந்த விஷயத்தில் மிக தெளிவான கண்ணோட்டத்தில் இருக்கிறது. 2020ம் ஆண்டு வரை பான்டம் கார் விற்பனை தொடரும் என்று ரோல்ஸ்ராய்ஸ் தெரிவித்துள்ளது. அதுவரை புதிய பான்டம் பற்றிய பேச்சுக்கே இடமில்லை என ரோல்ஸ்ராய்ஸ் கூறும் காரணம் நியாயமானதே.
பான்டம் அறிமுகம்
பிஎம்டபிள்யூ கையில் ரோல்ஸ்ராய்ஸ் வந்த 2003ம் ஆண்டில் பான்டம் கார் அறிமுகம் செய்யப்பட்டது. 2012ல் புதிய 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டு, இருக்கை டிசைனில் மாற்றங்களுடன் வந்தது. மியூசிக் சிஸ்டமும் மேம்படுத்தப்பட்டது. தற்போது பான்டம் சீரிஸ் 2 என்ற பெயரில் விற்பனையாகிறது.
வாடிக்கையாளர் மதிப்பு
17 ஆண்டுகள் வரை விற்பனை செய்யும் திட்டத்துடனே பான்டம் கார் அறிமுகம் செய்யப்பட்டது. 10 ஆண்டுகளை கடந்துவிட்டது. குறுகிய கால இடைவெளியில் புதிய மாடலை அறிமுகம் செய்தால், முந்தைய வாடிக்கையாளர்கள் தங்களது காரை சீக்கிரமாகவே பழைய மாடலாகிவிட்டதே என்று கருதும் நிலைக்கு தள்ளப்படுவர். எனவேதான் உடனுக்குடன் அறிமுகத்தை தவிர்க்கிறோம் என்கிறார். நியாயம்தான்!
இரட்டிப்பு ஆயுள்
சாதாரண கார்களை முறையாக பராமரித்தால் 8 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறந்த ஆயுட்காலம் கொண்டதாக இருக்கும். ஆனால், ரோல்ஸ்ராய்ஸ் கார்களின் ஆயுட்காலம் இதைவிட இருமடங்கு கூடுதலாக இருக்கின்றன. எனவே, காரை உடனடியாக மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்பதால், ரோல்ஸ்ராய்ஸ் வாடிக்கையாளர்கள் புதிய கார் மாடல் வரும் வரை பழைய காரை வைத்து ஓட்ட முடியும். வேறு பிராண்டையும் நினைத்து பார்க்க அவசியம் இல்லை.
விலை
இந்தியாவில் கஸ்டமைஸ் வசதிகள் சேர்த்து அதிகபட்சமாக ரூ.7 கோடியாகிறது பான்டம் கார். எனவே, 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாம் கார்களை மாற்றுவது போன்று இதில் சாத்தியமில்லை என்பதும் ஒரு காரணம்.
அடுத்த தலைமுறை மாடல்
2020ல்தான் புதிய பான்டம் அல்லது புதிய மாற்று கார் மாடல் அறிமுகம் செய்யப்படும். இந்த கார் பிஎம்டபிள்யூவின் 7ம் தலைமுறை மாடலின் பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்பட உள்ளது. அதுவரை, இதே பான்டம்தான் விற்பனையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
-
ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
-
ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி