ஜனவரி முதல் கார் விலையை உயர்த்துவதாக நிசான் அறிவிப்பு
ஜனவரி முதல் அனைத்து கார்களின் விலையையும் 4 சதவீதம் வரை உயர்த்துவதாக நிசான் அறிவித்துள்ளது. சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட டெரானோ உள்பட அனைத்து கார் மாடல்களின் விலையும் உயர்த்தப்படுகிறது.
ஜனவரி முதல் தேதியிலிருந்து இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது. பல்வேறு காரணங்களால் உற்பத்தி செலவீனம் அதிகரித்துள்ளதால், இந்த விலை உயர்வு முடிவை எடுத்ததாக நிசான் தெரிவித்துள்ளது.

கார் நிறுவனங்கள் தொடர்ந்து கார் விலையை உயர்த்துவதாக அறிவித்து வருவது புத்தாண்டில் கார் வாங்க காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








