மேம்படுத்தப்பட்ட சூப்பர்ப் காரை அறிமுகப்படுத்தும் ஸ்கோடா
வரும் பிப்ரவரி மாதம் மேம்படுத்தப்பட்ட ஸ்கோடா சூப்பர்ப் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய ஆக்டாவியா மூலம் சற்று உற்சாகமடைந்திருக்கும் ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் புதிய மாடல்களை தருவிக்கும் பணிகளில் மும்முரமாகியுள்ளது.

அடுத்ததாக மேம்படுத்தப்பட்ட சூப்பர்ப் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. பிப்ரவரி துவக்கத்தில் அல்லது டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.
தோற்றத்தில் கூடுதல் புதுப்பொலிவு பெற்றிருக்கும் மேம்படுத்தப்பட்ட ஸ்கோடா சூப்பர்ப் காரில் 1.8 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.


Click it and Unblock the Notifications








