சொகுசு கார் நிறுவனங்களுக்கு இணையாக புதிய ஷோரூம் திறந்த டாடா!
சொகுசு கார் நிறுவனங்களுக்கு இணையான அம்சங்கள், வசதிகளுடன் புதிய கார் ஷோரூமை மும்பையில் டாடா மோட்டார்ஸ் திறந்துள்ளது. மும்பை, பிரபாதேவி பகுதியில் 4,400 சதுர அடி பரப்பளவில் புதிய ஷோரூம் அமைக்கப்பட்டுள்ளது. விசாலமான கூடத்தில் கார்கள் பார்வைக்கு நிறுத்தப்பட்டுள்ளன. கார்களுக்கான பிரத்யேக ஆக்சஸெரீஸ்கள் அழகாக பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களுக்கான லாஞ்ச் பகுதி பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது.
மேலும், கார்களின் விபரங்களை ஷோரூமில் வைக்கப்பட்டிருக்கும் டேப்லெட் மூலம் பெரிய திரையில் பார்க்கும் வசதியும் இருக்கிறது.வைஃபை வசதி, கஃபே மற்றும் குழந்தைகள் விளையாட்டு பகுதி என ஷோரூமிற்கு வரும் வாடிக்கையாளர்களின் மன நிறைவு தரும் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய ஷோரூம் வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் புதிய அனுபவத்தை தரும் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

டாடாவின் பிரிமியம் கார் ஷோரூம்

டாடாவின் பிரிமியம் கார் ஷோரூம்

டாடாவின் பிரிமியம் கார் ஷோரூம்

டாடாவின் பிரிமியம் கார் ஷோரூம்



Click it and Unblock the Notifications







