இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் பீட்டில் விற்பனை நிறுத்தம்!
இந்தியாவில் போதிய வரேவேற்பு இல்லாததால் பீட்டில் காரின் விற்பனையை ஃபோக்ஸ்வேகன் நிறுத்தியுள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு பீட்டில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதன் பிரத்யேகமான டிசைன் வாடிக்கையாளர்களை கவர்ந்தது.

ஆனாலும், இதன் எகிடுதகிடான விலைதான் வாடிக்கையாளர்களை முகம் சுழிக்க வைத்தது. ரூ.20.45 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படும், பீட்டிலுக்கு போட்டியாக பல புதிய கார் மாடல்கள் வந்துவிட்டன.
இதன் எதிரொலியாவில் பீட்டில் சுத்தமாக போனியாவில்லை. எனவே, இந்தியாவில் பீட்டிலுக்கு ஃபோக்ஸ்வேகன் கும்பிடு போட்டுள்ளது.
அடுத்து இந்தியாவில் புதிய பீட்டில் காரை விற்பனைக்கு கொண்டு வருவதற்கும் ஃபோக்ஸ்வேகனுக்கு விருப்பமில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications