பஸாத் கார் விற்பனையை நிறுத்தவில்லை: ஃபோக்ஸ்வேகன் விளக்கம்
இந்தியாவில் பஸாத் கார் விற்பனையை நிறுத்தவில்லை என்று ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன் பஸாத் கார் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இந்த தகவலை ஃபோக்ஸ்வேகன் மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. பஸாத் கார் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், எம்க்யூபி பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்பட்ட புதிய பஸாத் காரை இந்தியாவில் அறிமுகம் செய்வதையும் உறுதிப்படுத்தியிருக்கிறது.
சரியான சமயத்தில் அந்த புதிய பஸாத் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளது. 8ம் தலைமுறை மாடலாக வரும் புதிய பஸாத் கார் அடுத்த ஆண்டு பிற்பகுதியில் இிந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








