மே 1 முதல் ஆடி கார்களின் விலை உயர்கிறது
வரும் 1ந் தேதி முதல் ஆடி கார்களின் விலை 3 சதவீதம் உயர்த்தப்பட உள்ளது. உற்பத்தி செலவீனம் அதிகரித்துள்ளதையடுத்து இந்த விலை உயர்வு நடவடிக்கையை எடுக்க வேண்டியதாயிற்று என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பிலும் ஏற்ற இறக்கங்கள் இருப்பதை கருதி இந்த விலை உயர்வை அறிவிப்பதாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆடி ஏ4, ஏ6, ஏ7 ஸ்போர்ட்பேக், ஆடி ஏ8எல் ஆகிய செடான் கார்களையும், க்யூ3, க்யூ5, க்யூ7 ஆகிய எஸ்யூவி மாடல்களையும், எஸ்4, எஸ்6, ஆர்எஸ்5 கூபே, ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக், ஆடி டிடி கூபே, ஆடி ஆர்8, ஆர்8 ஸ்பைடர், ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் ஆகிய உயர்வகையிலான கார் மாடல்களை ஆடி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications








