அக்டோபரில் வருகிறது புதிய ஃபியட் அவென்டுரா!
வரும் அக்டோபர் மாதம் புதிய ஃபியட் அவென்டுரா கிராஸ்ஓவர் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
புதிய புன்ட்டோ எவோ ஹேட்ச்பேக் காரின் அடிப்படையிலான கிராஸ்ஓவர் மாடல்தான் அவென்டுரா. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் வைக்கப்பட்டிருந்த இந்த புதிய மாடல் தீவிர சோதனைகளில் இருந்து வருகிறது.

புன்ட்டோ எவோ காரைவிட கூடுதல் கிரவுண்ட் கிளியரன்ஸ், இடவசதி கொண்டதாக மாற்றப்பட்டிருக்கிறது. தவிர்த்து, ஏராளமான ஆஃப்ரோடு ஆக்சஸெரீஸ்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் விற்பனைக்கு வருகிறது. பெட்ரோல் மாடலில் 1.4 லிட்டர் எஞ்சினும், டீசல் மாடலில் 1.3 லிட்டர் எஞ்சினும் பொருத்தப்பட்டிருக்கும். ஆனால், டியூனிங்கில் இந்த எஞ்சின்கள் வேறுபடும்.
ரூ.5.5 லட்சம் விலையில் இந்த புதிய கிராஸ்ஓவர் மாடலை ஃபியட் விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய மாடல் விற்பனைக்கு வரும்போது ஃபோக்ஸ்வேகன் கிராஸ்போலோ மற்றும் டொயோட்டா எட்டியோஸ் கிராஸ் மாடல்களுக்கு போட்டியை கொடுக்கும்.


Click it and Unblock the Notifications








