இந்தியாவிலிருந்து அவென்டூராவை ஏற்றுமதி செய்ய ஃபியட் திட்டம்
இந்தியாவில் கார் உற்பத்திக்கான பல சாதக அம்சங்கள் நிலவுகின்றன. இதனால், பல முன்னணி கார் நிறுவனங்கள் இந்தியாவை உற்பத்தி கேந்திரமாக கொண்டு செயல்படுவதற்கு முனைப்பு காட்டி வருகின்றன.
அந்த வரிசையில் ஃபியட் நிறுவனமும் இணைய உள்ளது. ஆம், டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட அவென்டூரா கிராஸ்ஓவர் காரை இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்ய ஃபியட் திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய கிராஸ்ஓவர் மாடல் புன்ட்டோ அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இந்திய மண்ணில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் இந்த புதிய மாடல் கிடைக்கும். இந்திய மார்க்கெட் மட்டுமின்றி, பல வெளிநாட்டு மார்க்கெட்டுகளுக்கும் ஏற்றுமதி செய்வதன் மூலம் சரிவிகிதமான விற்பனை வளர்ச்சியை பெறுவதற்கு வழி ஏற்படும் என்று ஃபியட் நினைக்கிறது.


Click it and Unblock the Notifications








