ரியல் ஆஃப் ரோடராக வரும் ஃபோர்ஸ் கூர்கா... செப்டம்பர் முதல் டெலிவிரி!
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விற்பனை நிறுத்தப்பட்ட ஃபோர்ஸ் கூர்கா எஸ்யூவி மீண்டும் மார்க்கெட்டிற்கு வருகிறது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிலேயே அறிமுகம் செய்யப்பட்டாலும், ஆட்டோமொபைல் துறை நிபுணர்களின் ஆலோசனைகளின்படி, சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது தயாரிப்புக்கு தயார் நிலையில் ஃபோர்ஸ் கூர்கா இருக்கிறது. வரும் செப்டம்பர் மாதம் முதல் இந்த உண்மையான ஆஃப்ரோடு அம்சங்கள் கொண்ட எஸ்யூவியின் டெலிவிரி துவங்கப்பட உள்ளது. ஹார்டு டாப் மற்றும் சாஃப்ட் டாப் கொண்ட மாடல்களில் வருகிறது.

ரியல் ஆஃப்ரோடர்
ஆஃப் ரோடு பயன்பாட்டுக்கு ஏற்ற பலவிதமான சிறப்பு வசதிகளையும், தொழில்நுட்பங்களையும் இந்த புதிய எஸ்யூவி பெற்றுள்ளது. அதனை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

டிஃபரன்ஷியல் லாக்
இந்த எஸ்யூவியில் முன் ஆக்சில் மற்றும் பின்புற ஆக்சில்களுக்கு டிஃபரன்ஷியல் லாக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஏர் இன்டேக்
நீர் நிலைகளை கடக்கும்போது எஞ்சினுக்கு சுவாசத்தை அளிப்பதற்காக குரோம் பூச்சு கொண்ட ஸ்நோர்கெல் பொருத்தப்பட்டிருக்கிறது.

கிரவுண்ட் கிளிரயன்ஸ்
இந்த எஸ்யூவி எந்தவொரு கரடுமுரடான பாதைகளிலும் எளிதாக செல்லும் வகையில், சிறப்பான கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக வருகிறது.

பவர் ஸ்டீயரிங்
இந்த எஸ்யூவியில் ஹார்டு டாப் எனப்படும் நிரந்தர கூரை, ஏசி, பவர் ஸ்டீயரிங் போன்ற வசதிகள் உள்ளன.

சேஸீ
ரீஇன்ஃபோர்ஸ்டு டியூபியூலர் சேஸீ கொண்ட இந்த எஸ்யூவி மிக வலுவான கட்டமைப்பு கொண்டதாக இருக்கும்.

கிராலர் வசதி
செங்குத்தான சாலைகளில் ஆக்சிலேட்டர் கொடுக்காமலே ஏறும் கிராலர் வசதியும் கொண்டது. சாலை நிலையை அறிந்து கொண்டு எஞ்சினுக்கு தேவைக்கேற்ப எரிபொருள் சப்ளை செய்யும் இசியூ., முக்கிய அம்சமாக குறிப்பிடலாம்.

எஞ்சின்
இந்த எஸ்யூவியில் 82 பிஎச்பி பவரை அளிக்கும் 2.6 லிட்டர் டர்போசார்ஜ்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 5 ஸ்பீடு சின்க்ரோமெஷ் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஹை, லோ ஆப்ஷன்கள் கொண்ட 4 வீல் டிரைவ் சிஸ்டம் ஆகியவை உள்ளது.


Click it and Unblock the Notifications








