சென்னை, கோவை ஷாப்பிங் மால்களுக்கு வரும் ஹோண்டா மொபிலியோ!
விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புத்தம் புதிய ஹோண்டா மொபிலியோ காரை பிரபலபடுத்துவதற்கான முயற்சிகளை ஹோண்டா கார் நிறுவனம் துவங்கியிருக்கிறது.
நாட்டின் முக்கிய நகரங்களில் இருக்கும் வணிக வளாகங்களில் பொது மக்கள் பார்வைக்கு ஹோண்டா மொபிலியோ கார் பார்வைக்கு வைக்கப்பட்டு வருகிறது. தற்போது என்சிஆர் எனப்படும் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கிய நகரங்களில் உள்ள வணிக வளாகங்களில் மொபிலியோ கார் வைக்கப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து, சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ள முன்னணி வணிக வளாகங்களில் இந்த கார் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. அதற்கான கால அட்டவணையை ஹோண்டா கார் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

கால அட்டவணை
சென்னை, கோயம்புத்தூர் மற்றும் பெங்களூர் நகரங்களில் உள்ள வணிக வளாகங்களில் அடுத்த மாதமும், ஆகஸ்ட் மாதங்களிலும் ஹோண்டா மொபிலியோ கார் பொது பார்வைக்கு வைக்கப்படும் தேதி விபரங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

சென்னை
ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ: ஆகஸ்ட் 8 முதல் 10 வரை
மயிலாப்பூர் சிட்டி சென்டர்: ஆகஸ்ட் 8 முதல் 10 வரை
வேளச்சேரி ஃபீனிக்ஸ் மால்: ஆகஸ்ட் 15 முதல் 17 வரை
வடபழனி ஃபோரம் விஜயா மால்: ஆகஸ்ட் 15 முதல் 17 வரை

கோவை
புதியவன் நகர் ப்ரூக்ஃபீல்டு மால்: ஆகஸ்ட் 1 முதல் 3 வரை
பீளமேடு ஃபன் ரிபப்ளிக் மால்: ஆகஸ்ட் 8 முதல் 10 வரை

பெங்களூர்
ராஜாஜி நகர் பிரிகேடு ஒரியான் மால்: ஜூலை 11 முதல் 13 வரை
மல்லேஸ்வரம் மந்த்ரி மால்: ஜூலை 11 முதல் 13 வரை
மக்ரத் ரோடு கருடா மால்: ஜூலை 18 முதல் 20 வரை
ஒயிட்ஃபீல்டு ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி: ஜூலை 18 முதல் 20 வரை

பிற நகர வாசகர்களுக்கு...
பிற நகரங்களில் ஹோண்டா மொபிலியோ கார் பொது பார்வைக்கு வைக்கப்படும் தேதி விபரங்களை அறிந்து கொள்ள விரும்புவோர் இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications








