இந்தியாவில் சான்டா ஃபீ எஸ்யூவியை திரும்ப அழைக்கும் ஹூண்டாய் மோட்டார்ஸ்!
இந்தியாவில் 2,437 சான்டா ஃபீ எஸ்யூவிகளை திரும்ப அழைக்க இருப்பதாக ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பிரேக்குடன் இணைக்கப்பட்டிருக்கும் ஸ்டாப் லேம்ப் சுவிட்சில் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை சரிசெய்து தரும் விதத்தில் இந்த திரும்ப பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு ஜூன் 26ந் தேதி முதல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 26ந் தேதி வரை தயாரிக்கப்பட்ட சான்டா ஃபீ எஸ்யூவிகள் திரும்ப பெறப்பட்டு பிரச்னை சரிசெய்து தரப்பட உள்ளன.
இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட சான்டா ஃபீ வாடிக்கையாளர்களுக்கு தனித்தனியாக தகவல் அனுப்பப்படும் என்று ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








