ஜீப் பிராண்டு எஸ்யூவி அறிமுகத்தை மீண்டும் தள்ளிப்போட்ட ஃபியட்!
ஜீப் பிராண்டில் புதிய எஸ்யூவி மாடல்களின் அறிமுகத்தை மீண்டும் தள்ளிப்போட்டுள்ளது ஃபியட் நிறுவனம்.
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஜீப் எஸ்யூவி மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஃபியட் நிறுவனம் ஜீப் பிராண்டில் ஒரு மாடலைகூட காட்சிக்கு வைக்கவில்லை.
இந்த நிலையில், மார்க்கெட்டில் சாதகமான சூழ்நிலை இல்லாததால், ஜீப் எஸ்யூவிகளின் அறிமுகத்தை மீண்டும் ஒத்தி வைத்திருப்பதாக ஃபியட் தெரிவித்துள்ளது.
வரும் ஏப்ரலில் துவங்கும் அடுத்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ஜீப் எஸ்யூவிகள் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டது.
ஆனால், தற்போது இந்த ஆண்டு இறுதியில் ஜீப் பிராண்டு எஸ்யூவிகளை விற்பனைக்கு கொண்டு வர ஃபியட் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








