அடுத்த ஆண்டு ஜீப் பிரிமியம் எஸ்யூவிகள் இந்தியா வருவது உறுதியானது
அடுத்த ஆண்டு இந்தியாவில் ஜீப் எஸ்யூவிகள் விற்பனைக்கு வருவது உறுதியாகியுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் அல்லது இந்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் ஜீப் எஸ்யூவிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பொருளாதார மந்தநிலையால் கார் மார்க்கெட்டில் சாதகமான சூழ்நிலை இல்லாததால், ஜீப் பிராண்டின் பிரிமியம் எஸ்யூவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்வதை ஃபியட் கிறைஸ்லர் குழுமம் தள்ளிப்போட்டது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு இந்தியாவில் ஜீப் பிராண்டின் பிரிமியம் எஸ்யூவி மாடல்களை அறிமுகப்படுத்த இருப்பதை ஃபியட் கிறைஸ்லர் குழுமம் உறுதி செய்துள்ளது. ஜீப் பிராண்டின் ரேங்லர் மற்றும் செரோக்கீ மாடல்கள் இறக்குமதி செய்து விற்பனை செய்ய ஃபியட் கிறைஸ்லர் குழுமம் திட்டமிட்டுள்ளது.
மேலும், ஜீப் பிராண்டுக்காக 20 பிரத்யேக ஷோரூம்களை முக்கிய நகரங்களில் அமைக்கவும் ஃபியட் கிறைஸ்லர் குழுமம் முடிவு செய்துள்ளது. ஜீப் பிராண்டின் பிரிமியம் எஸ்யூவி மாடல்கள் ஆடி, பென்ஸ் போன்ற சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்களின்


Click it and Unblock the Notifications








