அடுத்த ஆண்டு இந்தியா வரும் புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்!
அடுத்த ஆண்டு இந்தியாவில் புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் சொகுசு எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
பழமையடைந்துவிட்ட ஃப்ரீலேண்டர் எஸ்யூவிக்கு பதிலாக புதிய டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவியை லேண்ட்ரோவர் சமீபத்தில் அறிமுகம் செய்தது.
நவீன தொழில்நுட்பத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய எஸ்யூவி உலக கோடீஸ்வரர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. பாரிஸ் மோட்டார் ஷோ மூலம் பொது தரிசனத்திற்கு தயாராகி விட்ட இந்த புதிய மாடல் அடுத்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

ஃபோர்டு நிறுவனத்திடமிருந்து பெறப்படும் 2.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வருகிறது. 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக இருக்கும்.
5 பெரியவர்களும், 2 சிறியவர்களும் அமர்ந்து செல்லும் வகையில் இருக்கை வசதியை கொண்டிருக்கும். தனது சொகுசுத் தன்மையை காட்டும் வகையிலான தரமான லெதர் இருக்கைகள், ஏராளமான வசதிகளுடன் வாடிக்கையாளர்களை வசீகரிக்க வருகிறது புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி.


Click it and Unblock the Notifications








