மாருதியின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் பதவி விலகினார்
மாருதி கார் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவராக இருந்து வந்த மாயங் பரீக் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
கடந்த இருபதாண்டுகளுக்கு மேல் மாருதி நிறுவனத்தில் மாயங் பரீக் பணிபுரிந்து வந்தார். கடந்த 5 ஆண்டுகளாக இவரது தலைமையின் மாருதி நிறுவனத்தின் கார் விற்பனை பல உச்சங்களையும், சாதனை இலக்குகளையும் தொட்டது. டிசையர், ஸ்விஃப்ட், செலிரியோ உள்ளிட்ட மாருதியின் பல முக்கிய மாடல்களின் அறிமுகம் செய்ததில் மாயங் பரீக் முக்கிய பங்கு வகித்தவர்.

இந்தநிலையில், மாருதியின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவு தலைவர் பதவியிலிருந்து மாயங் பரீக் விலகியுள்ளார். அவர் விரைவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் சேர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 1991ம் ஆண்டு மாருதி நிறுவனத்தில் பணியில் சேர்ந்த மாயங் பரீக் பனாரஸ் ஹிந்து பல்கலைகழகத்தில் பி-டெக் பட்டமும், பெங்களூர் ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் எம்பிஏ., பட்டமும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது


Click it and Unblock the Notifications








