புதிய எலக்ட்ரிக் கார்: மஹிந்திரா ரேவா - நிசான் இடையே அமையும் புது கூட்டணி
புதிய எலக்ட்ரிக் காரை உருவாக்குவதற்காக மஹிந்திரா ரேவா மற்றும் நிசான் நிறுவனங்கள் கைகோர்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மஹிந்திரா ரேவா நிறுவனம் இ2ஓ எலக்ட்ரிக் காரை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. யாருடைய ஒத்துழைப்பும் இல்லாமல் இந்த நிறுவனம் இ2ஓ எலக்ட்ரிக் காரை சொந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கியது.

இதேபோன்று, ஜப்பானை சேர்ந்த நிறுவனம் லீஃப் என்ற எலக்ட்ரிக் காரை பல்வேறு நாடுகளில் விற்பனை செய்து வருகிறது. ஆனால், இந்தியாவில் லீஃப் கார் இதுவரை விற்பனைக்கு கொண்டு வரப்படவில்லை.
இந்த நிலையில், புதிய எலக்ட்ரிக் காரை உருவாக்குவதற்காக மஹிந்திரா ரேவா நிறுவனமும், நிசான் நிறுவனம் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம், மஹிந்திரா ரேவாவின் சர்வதேச வர்த்தக விரிவாக்கத் திட்டம் வலுப்பெறும்.
இதேபோன்று, இந்தியாவில் எலக்ட்ரிக் காரை விற்பனை செய்வதற்கு நிசானுக்கு வாய்ப்பு கிடைக்கும். இதுதொடர்பாக, விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காணத்தவறாதீர்: இதோ இன்றைய ஃபேஸ்புக் வீடியோ!!


Click it and Unblock the Notifications







