இன்னும் 7 மாதங்களில் டட்சன் கார்களுக்கு தனி ஷோரூம்கள்: நிசான்
இன்னும் 6 முதல் 7 மாதங்களில் டட்சன் கார்களுக்கு தனி ஷோரூம்கள் அமைக்க இருப்பதாக நிசான் தெரிவித்துள்ளது. இந்த நிதி ஆண்டிற்குள் இந்த புதிய ஷோரூம்கள் செயல்பாட்டுக்கு வந்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டட்சன் கார்கள் தற்போது நிசான் கார் ஷோரூம்களிலேயே விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் கார் வாங்கும் அனுபவத்தை சிறப்பானதாக மாற்றும் வகையில், டட்சன் பிராண்டு கார்களுக்கு தனி ஷோரூம்களை அமைக்க நிசான் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து நிசான் இந்தியா நிறுவனத்தின் தலைவர் கென்சிரோ யோமுரா கூறுகையில்," நடப்பு நிதி ஆண்டிற்குள் டட்சன் கார்களுக்கு தனி ஷோரூம்கள் அமைக்கப்பட்டுவிடும்.
நிசான் மற்றும் டட்சன் கார்களின் வாடிக்கையாளர்கள் வட்டம் வேறு வேறு. எனவே, தனித்தனி ஷோரூம்களில் கார் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம்.
தற்போது நிசான் பிராண்டுக்கு 130 ஷோரூம்கள் உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் இதனை 200 ஆக உயர்த்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








