இன்னும் 15 புகாட்டி வேரான் கார்கள் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும்
உலகின் அதிவேக கார் என்ற பட்டத்தின் மூலம் பிற ஸ்போர்ட்ஸ் கார்களிலிருந்து தனித்துவம் பெற்ற மாடலாக புகாட்டி வேரான் விளங்குகிறது. இதனால், உலக கோடீஸ்வரர்கள் மற்றும் கார் பிரியர்களின் கனவு மாடலாக கருதப்படுகிறது.
மொத்தம் 450 புகாட்டி வேரான் கார்களை மட்டுமே விற்பனை செய்யப்படும் என்பதும் இந்த காருக்கு தனி மதிப்பு இருந்து வருகிறது. 300 ஹார்டு டாப் கொண்ட புகாட்டி வேரான் கார்களும், 150 ரோட்ஸ்டெர் மாடலிலும் உற்பத்தி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், உற்பத்தி இலக்கு வைக்கப்பட்ட 450 கார்களில் இதுவரை 405 புகாட்டி வேரான் கார்கள் வாடிக்கையாளர்களு்ககு டெலிவிரி கொடுக்கப்பட்டுவிட்டன. தவிர, 30 கார்களுக்கு முன்பதிவும் முடிந்துவிட்டது. இதனால், இன்னும் 15 கார்கள் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும் என புகாட்டி நிறுவனத்தின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே, புகாட்டி வேரான் காரின் உற்பத்தி முடிவுக்கு வர இருக்கிறது. 2016ம் ஆண்டில் புகாட்டி வேரான் காருக்கு மாற்றாக புதிய கார் மாடலை புகாட்டி நிறுவனம் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2017ம் ஆண்டு முதல் புதிய புகாட்டி கார் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








