சென்னை, கொச்சி நகரங்களில் கார் ஷோரூம் திறக்கும் ரோல்ஸ்ராய்ஸ்
அடுத்த ஆண்டு சென்னை மற்றும் கொச்சி நகரங்களில் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் கார் ஷோரூம் திறக்கப்பட உள்ளது.
உலகின் மிக உயரிய வகை ஆடம்ப கார் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ்ராய்ஸ் டெல்லி, மும்பை, ஹைதராபாத் நகரங்களில் ஷோரூம்களை அமைத்து கார் விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் கோஸ்ட், ஃபான்டம் மற்றும் ரயீத் கார் மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், தென் இந்திய மார்க்கெட்டில் வர்த்தக விரிவாக்கம் செய்யும் பொருட்டு புதிதாக இரண்டு ஷோரூம்களை திறக்க திட்டமிட்டுள்ளது. இந்த புதிய ஷோரூம்கள் சென்னை மற்றும் கொச்சி நகரங்களில் அமைய இருக்கின்றன.
அடுத்த ஆண்டு இந்த புதிய ரோல்ஸ்ராய்ஸ் கார் ஷோரூம்கள் திறக்கப்பட உள்ளன. இதன்மூலம், வாடிக்கையாளர்களுக்கு மிக நெருக்கமான சேவையை வழங்க ரோல்ஸ்ராய்ஸ் கருதுகிறது.


Click it and Unblock the Notifications








