அடுத்த ஆண்டு மீண்டும் வருகிறது புதிய ஸ்கோடா ஃபேபியா!
அடுத்த ஆண்டு இந்தியாவில் புதிய ஸ்கோடா ஃபேபியா கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
விற்பனையில் சோபிக்காததால், ஃபேபியா காரின் உற்பத்தியை ஸ்கோடா ஆட்டோ நிறுத்தியது. தற்போது இருப்பு உள்ள கார்கள் மட்டுமே டீலர்ஷிப்புகளில் விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்த நிலையில், ஃபோக்ஸ்வேகன் எம்க்யூபி பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்பட்ட புதிய ஸ்கோடா ஃபேபியா கார் இந்த ஆண்டு இறுதியில் சர்வதேச அளவில் விற்பனைக்கு வர இருக்கிறது.
இந்த புதிய ஃபேபியா கார் இந்திய மார்க்கெட்டிலும் அறிமுகம் செய்ய ஸ்கோடா திட்டமிட்டுள்ளது. தற்போதைய மாடலைவிட சிறிது நீள, அகலத்தில் கூடுதலாக இருக்கும் என்பதால் அதிக இடவசதி கொண்டதாக இருக்கும்.
புதிய பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்பட்டாலும், காரின் ஒட்டுமொத்த டிசைனில் அதிக மாற்றங்கள் இருக்காது. இந்த காரில் டர்போசார்ஜர் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வரும் என்று தெரிவிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








